Pages

23/8/13

கோலப்போட்டி

கொஞ்ச நாளைக்கு முன்னாடி அம்மா வீட்டுக்கு போய் இருந்தேன். ஒரு நாள் மாலையில் ஒருவர் வந்து நாளைக்கு வைஷ்ணவா  கல்லூரியில்  இருந்து நம்ம சிவன் கோவிலுக்கு உழவாரப்பணி செய்ய மாணவிகள் வராங்க . அப்படியே நம்ம ஊர்ல ஒரு கோலப் போட்டி நடத்த  யோசிச்சு இருக்காங்களாம். எல்லாரும் போட்டிக்கு கோலம் ரெடி செஞ்சிகோங்க ன்னு சொல்லிட்டு  போனார்.கோல புக் எதுவும் கைல இல்ல . கலர் பொடி இல்ல .மறு நாள் பக்கத்துக்கு வீட்டு அக்கா கலர் பொடி குடுத்தாங்க . முருகரோட வாகனம் மயில் போட் டேன்.
டைம் ஆச்சு . கல்லூரி மாணவிகள் பேராசிரியர்கள் புடை சூழ வந்து பார்த்துட்டு போனாங்க.கொஞ்ச நேரம் கழிச்சு மீண்டும் வந்து மூன்றாம் பரிசு உங்க கோலத்துக்கு ன்னுஒரு இன்ப செய்தி குடுத்தாங்க.உடனே பக்கத்துக்கு வீட்டு அக்காக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு வந்தேன்.